புதன், 21 ஆகஸ்ட், 2013

சென்னையின் வயது 374 !

வணக்கம்,

ஆகஸ்ட் 22, 2013 - சென்னையின் வயது 374 (மெட்ராஸ் டே - Madras Day).

சிங்கார சென்னை - தமிழ் நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவில் வர்த்தக, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்வி மையமான ஒரு பெருநகரம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை சேவைகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரம். இன்னும் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போகலாம். நம் சிங்கார சென்னை நாளை (22 ஆகஸ்ட்) 375 ஆம் ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது. இப்பேர்பட்ட சென்னையின் சில வரலாற்று சம்பவங்களையும், காலச்சுவடுகளையும், நான் இணையத்தில் படித்து வியந்த சில வரலாற்று சரித்திர குறிப்புகளை உங்களிடம் பகிர்கிறேன்.

நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...


கி.பி. 1-ஆம். நூற்றாண்டு (52-70) :
ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார்.

கி.பி. 2-ஆம். நூற்றாண்டு  :
தொண்டைமண்டலம் (இன்றைய சென்னை ), தொண்டைமான் இளம்திரையன் என்ற பல்லவ அரசனால் ஆளப்பட்டது.

கி.மு 5-ஆம். நூற்றாண்டு - :
திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். (~ கி.மு. 2 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.)

கி.பி. 7-ஆம். நூற்றாண்டு  :
மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
 
கி.பி. 8-ஆம். நூற்றாண்டு  :
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் பல்லவ மன்னன் நரசிமவர்மனால் முதலில் கட்டப்பட்டது.

கி.பி. 16-ஆம். நூற்றாண்டு  :
சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

1522-ல் போர்த்துகீசியர்கள் (Portuguese) இந்தியாவிற்கு வந்து சென்னை மயிலாப்பூர் அருகே சாந்தோம் (São Tomé) என்ற துறைமுகத்தை கட்டினர்.

1523-ல் சாந்தோம் சர்ச் (San Thome Church) கட்டப்பட்டது. 

கி.பி. 17-ஆம். நூற்றாண்டு  :
1612-ல் டச்சுகாரர்கள் (Dutch) இந்தியாவிற்கு வந்து முதலில் பழவேற்காடு (Pulicat) பகுதியை ஆக்கிரமிப்பு செய்தார்கள்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, (British East India Company) 1626-ல் பழவேற்காட்டில் இருந்து 35 மைல் தூரமுள்ள துர்காபுரம் என்ற கிராமத்தில் தொழிற்சாலை கட்ட எண்ணினர்.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

23 ஏப்ரல், 1640-ல்  புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.


நாட்டின் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில்
16 நவம்பர் தொடங்கப்பட்டது ; பின்னர் அது அரசு பொது மருத்துவமனை ஆக்கப்பட்டது.

1668-ல்  திருவல்லிக்கேணி கிராமம் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1672-ல் கிண்டி லாட்ஜ் (Guindy Lodge) கவர்னர் வில்லியம் லங்க்ஹோர்னே -ஆல் (Governor William Langhorne ) கட்டப்பட்டது.

1678-ல் காளிகாம்பாள் கோவில் கட்டி முடிக்கபட்டது.

1688-ல்  சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் (Municipal Corporation) தொடங்கப்பட்டது.

1693-ல் எழும்பூர், புரசைவாக்கம் மற்றும் தண்டையார்பேட்டை  ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

கி.பி. 18-ஆம். நூற்றாண்டு:

1701-ல்  பேரரசர் அவுரங்கசீப்பின் ஜெனரல் தாவுத் கான் (General Duad Khan) புனித ஜார்ஜ் கோட்டையை தாக்கினான். எனினும், ஆங்கிலேய அரசு கோட்டையை தக்க வைத்து கொண்டது.

திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம், சாத்தன்காடு   ஆகிய கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1735-ல் சின்னதறிபேட்டை (சிந்தாதரிபேட்டை) உருவாக்கபட்டது.

வேப்பேரி, பெரியமேடு , பெரம்பூர், புதுப்பாக்கம் ஆகிய கிராமங்கள்  சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1746-ல்  பிரஞ்சு  தளபதி லா போர்டோநாய்ஸ்  (La Bourdonnais) புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினான்.

1749-ல் சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் சென்னையுடன் இணைக்கப்பட்டது.

1759-ல் பிரஞ்சு முற்றுகை முடிந்தது.

1767: ஹைதர் அலி முதல் முறையாக சென்னை நகரத்தை நோக்கி படையேடுத்தான்.

1768 ஆம் ஆண்டு சேப்பாக்கம் அரண்மனை ஆற்காடு நவாப் மூலம் கட்டப்பட்டது.

1772-ல் புனித ஜார்ஜ் கோட்டையில்  உள்ள பொது மருத்துவமனை அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

1777-ல்  வீரப்பிள்ளை முதல் கொத்தவாலாக நியமிக்கபட்டார். அவர் பெயரை ஒட்டி 'கொத்தவால் சாவடி' பெயர் வந்தது.

1784-ல் முதல் செய்தித்தாள், மெட்ராஸ் கூரியர் (Madras Courier),  நிறுவப்பட்டது.

1785-ல்  சென்னையில் முதல் தபால் அலுவலக செயல்பாட்டை தொடங்கப்பட்டது.

1788-ல் தாமஸ் பாரி (Thomas Parry) என்ற ஆங்கிலேய வியாபாரி, சென்னையில் தொழிற்முறை வணிகம் ஆரம்பித்தார். அவர் பெயராலேயே இன்றைய பாரிஸ் (Parrys) உருவானது.

1794-ல் ஐரோப்பா வெளியே செயல்பட்டும் பழமையான அரசு சர்வே பள்ளி
(Government Survey School ) புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப்பட்டது (தற்போதைய அண்ணா பல்கலைகழகம் ).

நவம்பர் 24, 1794-ல் அமெரிக்க தூதரகம் சென்னையில் திறக்கப்பட்டது.

1798-ல் ராயபேட்டையில் அமீர் மஹால் ஆற்காடு நாவப்-ஆல் கட்டப்பட்டது. 

1795-ல் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி கட்டப்பட்டது.

கி.பி. 19-ஆம். நூற்றாண்டு:

1817-ல் சென்னை இலக்கிய சங்கம் (Madras Literature Society) நிறுவப்பட்டது.

1820-ல் ஆளுநர் தாமஸ் மன்ரோ (Thomas Munro) கிண்டி லாட்ஜ் கட்டடத்தை
ராஜ் பவனாக (Raj Bhavan)  ஆளுநர் மாளிகையாக மாற்றினார்.

1831-ல் முதல் வணிக வங்கி, மெட்ராஸ் பேங்க் (Madras Bank) நிறுவப்பட்டது.

1837-ல் சென்னை கிறிஸ்துவ கல்லூரி (Madras Christian College) தொடங்கப்பட்டது.

1841-ல்  ஐஸ் ஹவுஸ் (Ice House) கட்டப்பட்டது. ஐஸ் (Ice) கப்பல்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து  இருந்து கொண்டு வரப்பட்டு சேமிக்கப்பட்டது.
பின்னர் விவேகானந்தர் இல்லம் என பெயர் மாற்றம் பெற்றது.

1842-ல் முதல் கலங்கரை விளக்கம்  கட்டப்பட்டது.

1846-ல்  பச்சையப்பன் பள்ளி நிறுவப்பட்டது; பின்னர் பச்சையப்பன் கல்லூரியாக மாறியது.

1851-ல்  சென்னை அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

1853-ல் பார்க் டவுனில் (Park Town) உயிரியல் பூங்கா கட்டப்பட்டது.

1856-ல்  ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில்வே லைன்  (Railway line) கட்டப்பட்டது. முதல் ரயில் நிலையம் கட்டப்பட்டது.

1857-ல்  சென்னை பல்கலைக்கழகம் (Madras University) நிறுவப்பட்டது.

1862-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court)  கட்ட ஆணை பிறப்பிக்கபட்டது.

1863-1864 ல் ஸ்பென்சர் பிளாசா  (Spencer Plaza) மதராஸ் மாகாணத்தில், மவுண்ட் ரோடு  சார்லஸ் டூரன்ட் ( Charles Durant ) மற்றும் ஜே ஸ்பென்சர் (J. W. Spencer), ஆகியோர்களால் நிறுவப்பட்டது.

1864-65-ல்  பிரெசிடென்சி கல்லூரி (Presidency College) நிறுவப்பட்டது.

1869-ல் நேபியர் பாலம் (Napier Bridge), அப்போதைய மெட்ராஸ் கவர்னர் பிரான்சிஸ் நேபியர் (Napier Francis) என்பவரால் கட்டப்பட்டது.

1873-ல் சென்னை சென்ட்ரல்(Chennai Central) ரயில் நிலையம் பார்க் டவுன்
(Park Town) நகரில் கட்டப்பட்டது.


1876-1878-ல் பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) தோண்டப்பட்டது.

1876-78 -ல் சென்னையில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டது.

1878-ல்  'தி இந்து' (The Hindu) செய்தித்தாள் நிறுவப்பட்டது.

1881-ல்  சென்னை துறைமுகம்  உருவாகியது.

1884-ல் அப்போதைய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்  (Mountstuart Elphinstone Grant Duff) என்பவர்  சீர்ப்படுத்தி மெரினா (Marina) என்று பெயரிட்டார்.

1886-ல் கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) நிறுவப்பட்டது.

1889-ல்  உயர் நீதிமன்ற கட்டிட அடித்தளம் போடப்பட்டது.

1892-ல்  மதராஸ் உயர்நீதி மன்றம் ( Madras High Court) நிறுவப்பட்டது.

1895-ல்  முதல் டிராம் வண்டி (Tram Service) சேவை தொடங்கி உள்ளது.

1899-ல் முதல் தமிழ் நாளிதழ் சுதேசிமித்திரன்  நிறுவப்பட்டது.

கி.பி. 20-ஆம். நூற்றாண்டு:
 
1906-ல்  இந்தியன் வங்கி (Indian Bank) நிறுவப்பட்டது.

1908-ல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் (Chennai Egmore) கட்டப்பட்டது.

1914, செப்டம்பர் 22-ல் எம்டன் (Emden), ஜெர்மானிய போர்க்கப்பல் சென்னை துறைமுகத்தை தாக்கியது.

1916-ல் சென்னை கிரிக்கெட் கிளப் மைதானம் (Madras Cricket Club Ground) நிறுவப்பட்டது.( தற்போதைய M.A .Chidamdram Stadium )

1917-ல்  முதல் விமானம் சேவை ஆரம்பம்.

1925-ல்  லயோலா கல்லூரி (Loyala College) நிறுவப்பட்டது.
சென்னையில் முதல் பேருந்து சேவை தொடக்கம்.

1930-ல் கடலில் முழ்கி கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய டச்சு (Dutch) கப்பலோட்டிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் மெமோரியல் (Karl Schmidt Memorial)  கட்டப்பட்டது.

1931-ல்  புறநகர் மின்சார ரயில் சேவைகள் (சென்னை கடற்கரை- தாம்பரம்) தொடங்கியது.

1934-ல்  ராஜா சர் முத்தையா செட்டியார்  முதல் நகர மேயராக  (Mayor) நியமிக்கப்பட்டார்.

1938-ல்  ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) நிறுவப்பட்டது.

1946-ல் மாம்பலம், சைதாப்பேட்டை, அரசு பண்ணை, புலியூர் , கோடம்பாக்கம், சாலிக்கிராமம் , அடையார்,ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை சென்னை நகருடன் இணைக்கப்பட்டது.

செம்பியம், சிறுவல்லூர், பெருவல்லூர், செம்பரம்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, மடுவங்கரை, வேளச்சேரி ஆகியவை   சென்னையுடன் சேர்க்கபட்டது.

1947-ல் இந்திய தேசிய கொடி புனித ஜார்ஜ் கோட்டை மீது பறக்க விடப்பட்டது.
சென்னை நகரம், சென்னை மாநில தலைநகராக தேர்வு செய்யப்பட்டது.

1952-ல்  நேரு உள் விளையாட்டரங்கம் (Nehru Indoor Stadium) கட்டப்பட்டது.

1955-ல் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தொடங்கப்பட்டது.

1959-ல்  எல்.ஐ.சி (LIC) கட்டிடம் கட்டப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி தொடங்கப்பட்டது.

1969-ல் சென்னை (Madras City),  தமிழ்நாட்டின் தலைநகரானது.

1974-ல் சென்னை தொலைக்காட்சி நிலையம் நிறுவப்பட்டது.

1975-ல் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

1976-ல் தற்போதுள்ள புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.

1977-ல் கிண்டி தேசிய பூங்கா திறக்கப்பட்டது.

1983-ல்  உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.

1988-ல்  பிர்லா அறிவியல் கோளரங்கம் கட்டப்பட்டது.

1996-ல்  மதராஸ், சென்னை (Chennai) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி.பி. 21-ஆம். நூற்றாண்டு:

2000-ல் சென்னையில் தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் கால் பத்திக்க தொடங்கின.
தரமணியில் டைடல் பார்க் (Tidel Park) திறக்கப்பட்டது.

2002-ல் சென்னை கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) திறக்கப்பட்டது.

2004, டிசம்பர் 26-ல் சுனாமி பேரலையால் சென்னை மற்றும் கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது.

2010, ஜனவரி 11-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் (அ ) தமிழ் நாடு தலைமை செயலகம் மற்றும் சட்டமன்றம் வளாகம் திறக்கப்பட்டது.

2011, ஆகஸ்ட் 19-ல் ஓமந்துரார் அரசினர் தோட்டம் பல்சேவை  மருத்துவமணையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

(தகவல்: விக்கிபீடியா / கூகுள் )
மேலும் பழைய சென்னை படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

vikraman சொன்னது…

Good collection for history

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சேமித்துக் வைத்துக் கொள்ளவேண்டிய நல்லதொரு தொகுப்பு...! நன்றி...

பெயரில்லா சொன்னது…

மிக மிக அற்புதமான பதிவு. உலகில் எங்கு சென்றாலும் சென்னையின் பாரம்பரியத்திலும், அடையாளத்திலும் பெருமை கொள்கின்றேன். எல்லா இன, சாதி, மொழி மக்களும் ஒன்று கூடிக் குலாவி வாழும் நகரம். இங்கு தான் என்ன சாதி, மொழி, இனம் என எதையும் கேட்க மாட்டார்கள். சென்னை இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று. எழில் கொஞ்சும் அழகும், வரலாற்றுப் பாரம்பரியமும் நிறைந்த நகரம். இன்று அதன் பழம் பெருமைகளையும், அடையாளத்தையும், இயற்கையையும் இழந்து நிற்கின்றது மனதை வருத்துகின்றது. காலவரிசைகளில் முதல் நூற்றாண்டில் தோமசும், வள்ளுவரும் வாழ்ந்ததாய் கூறியிருப்பு உண்மையல்ல, வெறும் கட்டுக் கதையே. தோமசு என்ற சிரியாக் பிரச்சாரகர், 6-7ம் நூற்றாண்டளவில் கேரளத்தில் மதப் பணியாற்றினார். அவரும் இயேசுவின் சீடரும் ஒன்றல்ல. அடுத்து அவர் எவரும் சென்னையில் வாழ்ந்தது இல்லை. போர்த்துகேயரே சாந்தோம், லஸ், சின்னமலை, தாமஸ் மலைகளில் தேவாலங்களை 16-ம் நூற்றாண்டளவில் உருவாக்கினர். அத்தோடு ஒற்றியூரில் பவுத்த, சமணப் பள்ளிகளும் உண்டாயிருந்தன. மற்ற தகவல்கள் மிக அருமை. :) தி இந்துவில் சென்னையை குறித்து பல தகவல்கள் வெளியாகின, முத்தையை அவற்றை தொகுத்து புத்தகமாயும் போட்டுள்ளார்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் விமல்ராஜ் - அரிய பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி சீனா அவர்களே !!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி இக்பால் ....